Our Feeds


Friday, January 27, 2023

ShortNews

இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு விதித்த தடையை நீங்கியது பேஸ்புக்



பேஸ்புக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்ட அறிக்கையில், ‘ஜனாதிபதி தோ்தல் முடிவுகளை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் பேஸ்புக்கில் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது. அவா் இனியும் அதே போன்ற பதிவுகளை வெளியிட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும், இது குறித்து டிரம்ப் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இதே விவகாரத்தில் டிரம்புக்கு ட்விட்டா் விதித்திருந்த தடையை, தொழிலதிபா் எலான் மஸ்க் அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்திய பிறகு நீக்கினாா்.


அதற்குப் பிறகும் ட்விட்டரில் டிரம்ப் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »