Our Feeds


Saturday, January 28, 2023

News Editor

சுதந்திர தினத்துக்கு கோழிகள் வரும்?


 முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கோழிகளை சுதந்திர வைபவத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்த அவர், ஊடக சந்திப்புக்கு கோழியொன்றையும் கொண்டு வந்துள்ளார்.

முட்டைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டின் ஹோட்டல்கள், உணவகங்கள் முற்றாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »