Our Feeds


Sunday, January 22, 2023

SHAHNI RAMEES

#UPDATE: வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு...!

 

விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.





அதன்படி, ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ் குமாரின் இறுதிக் கிரியைகள் நாளை 23.01.2023 இடம்பெற்று ஹட்டன் குடாஓயா பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.




இதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »