Our Feeds


Thursday, February 23, 2023

ShortTalk

12,264 ரூபா பெறுமதியான மருந்துக்கு 33,400 ரூபா அறவிட்ட தனியார் மருத்துவமனை!



நாரஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று நோயாளி ஒருவருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ததாக தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


குறித்த வைத்தியசாலையில் 12,264 ரூபா பெறுமதியான மருந்துக்கு 33,400 ரூபாவும், 6,700 ரூபா பெறுமதியான மருந்துக்கு 17,030 ரூபாவும் அறவிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கே இவ்வாறு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.


இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »