Our Feeds


Friday, February 17, 2023

SHAHNI RAMEES

2 கஜமுத்துக்களுடன் ஐவர் கைது...!

 


இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்யத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் ஐவரைக் கம்பஹா பிரிவு ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



இந்த கஜமுத்துக்கள் 38 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவிருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



கம்பஹா - பழைய மினுவாங்கொடை வீதியிலுள்ள விகாரைக்கு அருகில் இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கம்பஹா பிரிவு ஊழல் விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இவர்கள் மஹவ, கம்பஹா மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 35-45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து. சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »