நாடு முழுவதும் 36,000 மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வங்கிகளில் நாணயக் கடிதங்கள் விடுவிக்கப்படாமையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும், பொதுமக்கள் கோரியுள்ள 36,000 மின் இணைப்புகளும், கைத்தொழில் துறைக்கான ஆயிரத்து 200 மின் இணைப்புகளும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக மின்பிறப்பாக்கி, வயர், மீற்றர் என்பனவற்றைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.