Our Feeds


Friday, February 3, 2023

ShortNews Admin

சுதந்திர தினத்தை முன்னிட்டு 588 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!



75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் குழுவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.


அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 588 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.


போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகள் குழுவும் இக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இது தவிர சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் செயற்பட்ட 31 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »