Our Feeds


Saturday, February 25, 2023

ShortTalk

யாழில் திடீரென முளைத்த புத்தர் சிலையால் பதற்றம்!



யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணற்றுக்கு அருகில் உள்ள அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.


நிலாவரைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் இராணுவத்தினரே இரவோடு இரவாக அதனை அமைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


இந் நிலையில் ஊர் மக்களால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.


புத்தர் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்


நிலாவரைக் கிணறு உள்ள பகுதியினை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »