எதிர்வரும் 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்திற்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காமையினால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.