அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, அந்தப் பதவியிலிருந்து விலக மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மயந்த திஸாநாயக்க பதவி விலகப் போவதில்லை எனக் கூறியதாக, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்..
எவ்வாறிருப்பினும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டால், மயந்த திசாநாயக்க, எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினராக நாடாளுமன்றில் செயற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.