பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சீருடை துணி கொண்டு செல்லப்பட்டு படிப்படியாக நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சீருடைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 780 கோடி ரூபா எனவும், அதில் 550 கோடி ரூபா சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களின் சீருடைத் தேவைகளில் 70 வீதமானவை சீன அரசாங்கத்தின் மானியமாகப் பெற்றுக் கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.