Our Feeds


Wednesday, February 15, 2023

SHAHNI RAMEES

பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை...!

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் (OIC) உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களில், இருவர் தற்போது பொலிஸ் கடமையில் உள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »