Our Feeds


Thursday, February 23, 2023

ShortTalk

தேர்தலுக்கு நிதியில்லை..! நிதியில்லை..! நிதியில்லை - பாராளுமன்றில் மிகத் தெளிவாக அறிவித்தார் ரனில்.



தேர்தலை பிற்போடுவது தமது எண்ணம் இல்லையெனவும், நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லையெனவும், தேர்தலுக்கான நிதி இல்லையெனவும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், மக்களுக்கு பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் உங்களுக்கு பிரச்சினையா, எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »