Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை..! - பந்துல குணவர்தன

 

தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதாந்த அரச வருமானம் அத்தியாவசிய தேவைகளுக்காகவே செலவிடப்படுகின்றது, நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமெனில் பணத்தை அச்சிடவும் முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேர்தலைக் காலம் தாழ்த்தும் நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. மாதாந்தம் கிடைக்கப் பெறும் வருமானம் தொடர்பிலும் , அவை எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது தொடர்பிலும் நாம் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் கடன் பெற்றும் , பணத்தை அச்சிட்டும் நாட்டை நிர்வகித்து வந்தன. எனினும் நாம் தற்போது கடனை மீள செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளமையினால் மீண்டும் கடன் பெற முடியாது. பணத்தை அச்சிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.

இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேசத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய இந்த பிரச்சினைகள் கொள்கை ரீதியில் தீர்க்கப்பட வேண்டுமே தவிர , அரசியல் ரீதியாக அல்ல.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த நிதி நிலைமை தொடர்பில் திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »