நேற்று (17) மாலை முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 700 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொலன்ன-தெனியாய-இறக்குவானை வீதியில் ஜம்புகஸ்வெட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 62 வயதுடைய ஆணும் 61 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் 62 வயதான கணவரும், முச்சக்கர வண்டியின் சாரதியான 24 வயதுடைய நபரும் படுகாயமடைந்த நிலையில் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, செங்குத்தான மற்றும் வளைவுகள் கொண்ட இந்த வீதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.