Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

#BREAKING: தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு..!

 

தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »