Our Feeds


Friday, February 24, 2023

SHAHNI RAMEES

#BREAKING: தேர்தல் நடத்தப்படுமா? வெளியான புதிய அறிவிப்பு..!

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதில்லை என இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



மேலும், மார்ச் 03 புதிய திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அத்தோடு, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்குமாறு வலியுறுத்துவதில் தலையிடுமாறு சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »