Our Feeds


Wednesday, March 1, 2023

SHAHNI RAMEES

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி..!

 

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில்  போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது. 



இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். 



இராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகின்ற நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.



அதிர்ஷ்டவசமாக இராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 



அப்போது அங்குள்ள சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை சோதனைக்காக நிறுத்தும்படி இராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.



ஆனால் அந்த வேன் நிற்காமல் இராணுவ வீரர்களை கடந்து சென்றுள்ளது. அதை தொடர்ந்து இராணுவ வீரர்கள் அந்த வேன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 



இதில் வேன் சாலையோரமாக மோதியது. இதையடுத்து, இராணுவ வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது வேனில் இருந்த 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர். 



வேனை சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி, போதை பொருள் போன்ற எதுவும் கிடைக்கவில்லை எனவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் பொது மக்கள் என்பது தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »