Our Feeds


Tuesday, March 14, 2023

SHAHNI RAMEES

மேல்மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சையும் ஒத்திவைப்பு..!


 மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும்

இறுதித் தவணைப் பரீட்சைக்காக நாளை (15) நடைபெறவிருந்த பாடங்கள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் அனைத்து கோட்டம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதன்படி, 9ஆம் தரத்தின் கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்கள் எதிர்வரும் 21ஆம் திகதியும், 10 மற்றும் 11ஆம் தரங்களின் இரண்டாம் பகுதிப் பாடங்கள் 22ஆம் திகதியும் நடைபெறும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 


அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) அமுல்படுத்தவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »