Our Feeds


Sunday, March 26, 2023

ShortTalk

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவவுள்ள ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது நிலையில் போர் இன்று 396-வது நாளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அண்டை மற்றும் ஐரோப்பிய நட்பு நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவவுள்ளது. ரஷ்யா, உக்ரைன், போலாந்து, லிதுவேனியா, லடிவா ஆகிய நாடுகளை பெலாரஸ் எல்லையாக கொண்டுள்ளது.


பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவியபோதும் அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்யாவிடமே இருக்கும் என்று ஜனாதிபதி புதின் தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. 


அதேவேளை, 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது.


சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனி நாடுகளானதால் அங்கிருந்து 1996ம் ஆண்டுக்குள் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப்பெற்றுக்கொண்டது. 


தற்போது பல ஆண்டுகள் கழித்து வெறொரு நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவும் நிகழ்வு உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »