தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்திலும் வெள்ளை ஈ தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 5000 ஏக்கர் தென்னந்தோப்புகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலை பெரும்பாலும் அக்போபுர, முள்ளிப்பொத்தானை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளது.
