Our Feeds


Sunday, April 23, 2023

SHAHNI RAMEES

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 

இந்தோனேசியாவின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 



இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.



இதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.



இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும் ,2-வது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 



நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை இதுவரையில் வெளியாகவில்லை. 



இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »