Our Feeds


Monday, April 24, 2023

News Editor

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.


அதன்படி, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.


மேலும், பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »