Our Feeds


Sunday, April 30, 2023

News Editor

கொரொனா தொற்றால் இருவர் உயிரிழப்பு


 கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.


மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் (28) உயிரிழந்ததாகவும், மற்றுமொரு நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


கொவிட் தொற்றுநோய் மீண்டும் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக முகமூடி அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் மரண பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.


மருத்துவமனை வட்டாரங்களின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் ஊழியர்களும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »