கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விசேட வசதிகளை வழங்குவதற்காக விசேட கருமபீடம் திங்கட்கிழமை (24) மாலை முதல் திறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி குழுவின் பரிந்துரையின் பிரகாரம் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.