Our Feeds


Sunday, April 30, 2023

News Editor

கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்திய கணவன், மனைவி கைது


 கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கொட்டதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பல பொலிஸ் நிலையங்களிலும் இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 53 வயதான சந்தேகநபர்களை கொடதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 4 தங்க மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, எரிவாயு கொள்கலன், உணவுப்பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »