Our Feeds


Friday, April 28, 2023

News Editor

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்


 நேபாளத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சுமார் 2 மணிநேரம் கழித்து, இரண்டாவது நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.


நேபாளத்தின் பல மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதோடு சிறிய நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.


உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »