Our Feeds


Friday, April 28, 2023

News Editor

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் வெட்டிக் கொலை


 தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதே வைத்தியசாலையில் இனந்தெரியாத ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மதவாச்சி, மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞர் நேற்று (27) மாலை பலரினால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11 ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அதே போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28) அதிகாலை 05 மணியளவில் பிரிவிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து மற்றும் காலில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.


அப்போது உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகம், மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »