Our Feeds


Thursday, April 20, 2023

News Editor

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

 

கண்டி, அலவத்துகொட பகுதியில் 43 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவத்தில் கைதான நபர்கள் 36 மற்றும் 41 வயதுடைய அலவத்துகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


சந்தேக நபர்களில் ஒருவர் அப்பகுதியில் படப்பிடிப்பு நிலையம் ஒன்றை பராமரித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.


இவர் கணினி மற்றும் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்துள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பொலிஸாருக்கு இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »