Our Feeds


Wednesday, April 26, 2023

News Editor

இந்திய சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்


 இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்த இந்திய பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்நிலையில் நேற்று 25 ஆம் திகதி நுவரெலியாவிற்கு சமூகமளித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எனினும், அவர் மாரடைப்பின் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »