Our Feeds


Monday, April 24, 2023

SHAHNI RAMEES

கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் சாணக்கியன் எம்.பி.

 

நாளைய தினம் (25) வடக்கு- கிழக்கில் பூரணமான கடையடைப்பு மற்றும் வடக்குக் கிழக்கை ஸ்தம்பிதமாக்கும் செயற்பாடொன்றை நாங்கள் அறிவித்திருந்தோம். இதிலே தமிழ்த் தேசிய பரப்பிலே இருக்கும் ஏழு கட்சிகள் சேர்ந்து இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விட்டிருக்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.



நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (25) வடக்கு - கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,



குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கையெழுத்திட்ட 7 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இயங்கு நிலையில் இல்லை. இலங்கைத் தமிழரசுக்கட்சிதான் இந்தப் போராட்டம் தொடர்பில் வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது.



நாளைய தினம் வடக்கு- கிழக்கில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் எனவும் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »