நாட்டில் கடுமையான வெப்பமான வானிலை நிலவுகின்றமையால், வாகனங்களில் உள்ள எரிபொருள் தாங்கிகளில் வெடிப்புகள் ஏற்படுவதாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வாகனங்களில் எரிபொருள் தாங்கிகள் முழுமையாக நிரப்பப்படுவதால் இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே பாதி அளவுக்கு மாத்திரமே அதனை நிரப்புமாறும் தெரிவிக்கும் பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.
