Our Feeds


Saturday, April 29, 2023

News Editor

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்


 போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது.


பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42 வயதான பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது மகளை விற்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனவே போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சிறுமி சடலத்தை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


இதையடுத்து, பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை மருந்துக்காக சிறுமியை அவரது தாயே விற்றமை தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »