தெஹிவளை, வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றையவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.