Our Feeds


Monday, May 1, 2023

News Editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரில்லை


 எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கலந்துரையாடலின் அடிப்படையில் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியுள்ள அறிக்கை தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதன் காரணமாக இந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கோரியதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »