Our Feeds


Friday, May 5, 2023

News Editor

கருவிலுள்ள சிசுவுக்கு மூளையில் சத்திர சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை

அமெரிக்க மருத்துவ குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். 


கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.


குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ளனர். 


இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.


இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும்.


இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும் என தெரிவித்தனர்.


மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது.


மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். 


அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற மருத்துவரகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்தது. மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை மருத்துவ குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக செய்துள்ளனர்.


உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையினை அமெரிக்க மருத்துவ குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »