Our Feeds


Thursday, May 4, 2023

ShortNews

பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்



சிறுநீரக மோசடியில் சிக்கிய பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு பரிந்துரை செய்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலையில் உரிய விசாரணைகள் முடியும்வரை அனைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் இடைநிறுத்துமாறு அக்குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (மே 04) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »