Our Feeds


Thursday, May 25, 2023

ShortTalk

ஜனாதிபதி நாடு திரும்பியதும் மேலும் இருவருக்கு ஆளுநர் பதவி?



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பியதும் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

 

அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

இந்தநிலையில், தற்போது, ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »