Our Feeds


Wednesday, May 3, 2023

News Editor

ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு


 வெலிகம - பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (3) பிற்பகல் வெலிகம - பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலுடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.


முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.


இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய அவர்களின் உறவினர் ஒருவர், முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஒருவரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார“.


ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வெலிகம - பெலியான, மோதரவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.


விபத்து தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »