Our Feeds


Tuesday, May 2, 2023

News Editor

டயானா கமகேவின் மனு குறித்து நீதிமன்றின் அறிவிப்பு

 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தாக்கல் செய்திருந்த வெளியேற்ற மனு மீதான வாதத்தை உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.


நீதிபதிகள் பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.


அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததை அடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயனா கமகே தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »