Our Feeds


Monday, May 15, 2023

News Editor

தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை


 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த பிரதேசங்களில் நேற்று (14) முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

அதன்படி, மொரவக கல்வி வலயத்திற்குட்பட்ட மொரவக்க மற்றும் கொட்டபொல பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளதாக மொரவக்க (தெனிய) வலய அலுவலகம் அறிவித்துள்ளது.

 

அனர்த்த நிலைமை காரணமாக மொரவக கல்வி வலயத்திற்கு (தெனிய) உட்பட்ட பஸ்கொட பிரதேசத்தில் ஊருபொக்க தேசிய பாடசாலை மற்றும் பட்டிவெல கனிது வித்தியாலயம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளதாக மொரவக (தெனிய) வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

முலட்டியான கல்வி வலயத்தின் திஹாகொட பிரிவுக்கு உட்பட்ட கிடலாகம கிழக்கு மற்றும் மேற்கு பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

 

அக்குரஸ்ஸ கல்வி பிராந்தியத்தின் அக்குரஸ்ஸ மற்றும் மாலிம்பட பிரிவுகளுக்கு உட்பட்ட தியலபே கல்லூரி, அதுரலிய மகா வித்தியாலயம், பஹுரன்வில கல்லூரி மற்றும் பரடுவ கல்லூரி ஆகியவையும் இன்று மூடப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »