Our Feeds


Thursday, June 1, 2023

ShortNews Admin

ஆரையம்பதி வங்கியில் கொள்ளை முயற்சி - பொதுமக்களை கண்டதும் ஓடித்தப்பிய கொள்ளையர்கள்!



ஆரையம்பதியில் உள்ள இலங்கை வங்கிக்கிளையில், திருடர்கள் பணத்தை  கொள்ளையிட முயற்சித்த சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


இரும்பு உபகரணங்கள், அலவாங்குகள் கொண்டு வங்கியின் கதவை திருடர்கள் உடைத்தபோதும் , அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை ஒலிச் சத்தம் காரணமாக அக்கம் பக்க மக்கள் திரண்டதால் தப்பியோடியுள்ளனர். 


இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


-கனகராசா சரவணன் -

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »