Our Feeds


Thursday, July 27, 2023

ShortNews

மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபேரணி - மலையகம் 200



தமிழகத்தில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாளைய தினம் மன்னாரில் ஆரம்பிக்கும் இந்த பயணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.

மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது.

மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து இந்த நடைபயணத்தை முன்னெடுக்கவுள்ளன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »