Our Feeds


Monday, October 2, 2023

ShortNews

ஈஸ்டர் தாக்குதல் - “ஸ்கொட்லாண்ட் யார்ட்” உதவியை இதுவரை இலங்கை அரசாங்கம் கோரவில்லையாம்.



உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கைகளை ஆராய்வதற்காக ஸ்கொட்லாண்ட் யார்ட்டின் உதவியை கோரியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் தெரிவித்திருந்தார் எனினும் அரசாங்கம் அவ்வாறான உதவியை கோரவில்லை என பிரிட்டனின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அவ்வாறான வேண்டுகோள்களை இலங்கைக்கான பிரித்தானிய தூதரகத்தின் ஊடாக விடுவித்திருக்க வேண்டும் எனினும் அவ்வாறான வேண்டுகோள்கள் விடுக்கப்படவில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பரில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கைகளை ஆராய்வதற்காக ஸ்கொட்லாண்ட்யார்ட்டின் உதவியை கோரியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மறைகரம் உள்ளதாக என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த   உதவியை கோரியுள்ளதாக  ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நன்றி: வீரகேசரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »