Our Feeds


Monday, October 9, 2023

ShortNews Admin

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்



முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்தரணிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தடுக்கப்பட வேண்டும் எனவும், முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »