Our Feeds


Saturday, October 28, 2023

ShortNews

மற்றுமொரு கட்டிடம் தீக்கிரை – பல சொத்துக்களுக்கு சேதம்



பாணந்துறை நகரிலுள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதுடன், தீ பரவல் காரணமாக பெரும்பாலான விளையாட்டு பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மொறட்டுவை மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »