Our Feeds


Monday, October 9, 2023

ShortNews Admin

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு - ராகுல் காந்தி அறிவிப்பு



காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.


கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


மேலும் இந்த போரில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து உள்ளது. "இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி வலியுறுத்துகிறது," என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நில உரிமை, கண்ணியம், மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இருதரப்புக்கும் காங்கிரஸ் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் மத்திய அரசு இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »