Our Feeds


Saturday, October 7, 2023

SHAHNI RAMEES

கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் விழுந்து விபத்து : பஸ் சாரதிக்கும் நடத்துனருக்கும் விடுமுறை!

 

கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேசன் வீதியின் விபர்ட்டி சுற்றுவட்டப்பகுதிக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரம் ஒன்று வோரோடு சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், குறித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதிக்கும் நடத்துனருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இருவரும் மன அழுத்தத்தில் உள்ளமையால்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தம் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் 5 பேர் பலியானதுடன், 5 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »