Our Feeds


Saturday, December 23, 2023

News Editor

1.24 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கிய திலும் அமுனுகம


 இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 1.24 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளார்.


 செவனகல மற்றும் பெலவத்த ஆகிய இரண்டு சீனி நிறுவனங்களின் இலாபமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளரிடம் காசோலை மூலம் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


 இத்தொகையை செலுத்துவதன் மூலம், இலங்கை சீனி நிறுவன ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள நிபந்தனைகள் பூர்த்தியாகின்றன.


 2023ஆம் ஆண்டின் இறுதியில், ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »