Our Feeds


Thursday, December 28, 2023

SHAHNI RAMEES

சந்தையில் பாண் மற்றும் பழைய அரிசி தூள்கள் கலந்த மிளகாய் தூள்..!

 

பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூள் மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியினை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.


கொழும்பு, கொஸ்கஸ் சந்தி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இந்த மோசடி கும்பல் இயங்கி வருகிறது, இதற்காக புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இருந்து அகற்றப்பட்ட பாண் தூள்கள் மற்றும் பழைய அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் உள்ள கடைகளுக்கு மிளகாய் பொடி கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »